80
ஐக்கிய தேசியக் கட்சியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் மாற்றம் செய்யத் தீர்மானித்துள்ளார். அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக அமைச்சரவை மாற்றம் சில மாதங்களாக காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஜனாதிபதி விரைவில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spread the love