Home இலங்கை ஞானசார தேரரின் கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துகின்றது – கிழக்கு முதலமைச்சர்

ஞானசார தேரரின் கருத்துக்கள் நாட்டின் நீதித்துறையை கேள்விக்குட்படுத்துகின்றது – கிழக்கு முதலமைச்சர்

by admin

நாட்டின் சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் விதமாகவும் தீவிரவாத ரீதியில் கருத்துக்களை  வெளியிட்டு வரும் ஞானசார தேரரின் கருத்துக்கள் இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயகத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,  அண்மையில் ஞானசார  தேரர்  இஸ்லாமிய மதத்தையும் சிறுபான்மையினரை தூற்றியும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கே இந்த நாட்டில் பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது,அத்தகைய நோக்கத்தையே கேலிக்குள்ளாக்கும் வகையில் தம்மை உத்தியோகப்பற்றற்ற பொலிஸ் பிரிவு என அழைத்துக் கொள்வது நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்குற்கு ஏற்பட்ட  அபாயமாகவே கருத வேண்டியுள்ளது,

அது மாத்திரமன்றி   ஏற்கனவே அளுத்தகமை மற்றும் சில பகுதிகளில் ஏற்பட்ட இனமுறுகல்களுடன் இவரின் பெயர் இணைத்துக் கூறப்பட்டு வரும் நிலையில் கிழக்கில் பாரிய இனமுறுகலை ஏற்படுத்துவதற்கான  பின்னணியொன்றை தற்போது ஞானசார தேரர் உருவாக்கி வருகின்றாரா என்ற சந்தேகம் தற்போது தோன்றியுள்ளது.

கிழக்கில் இதுவரை மூவின மக்களும்  ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகையில்  அண்மைக்காலமாக இனவாத செயற்பாடுகளை பரப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் போது  சட்டம் ஒழுங்ககை பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் தரப்பினர் நடந்து  கொள்கின்ற முறை குறித்து  பொதுமக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் தான் நாம்  பொலிஸ் அதிகாரத்தை கேட்கின்றோம்,எமக்கு பொலிஸ் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பது  எவ்வாறு  என்பதை நாம் காட்டுகின்றோம்.  அது மாத்திரமன்றி ஞானசார தேரரின்  முஸ்லிங்களை சீண்டிப் பார்க்கும் விதமான  கருத்துக்கள் தொடருமானால் அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எஎனவும் கிழக்கு முதலமைதச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தான் கிழக்கில் விஹாரைகளை  அமைப்பதற்கு  எதிராக இருப்பதாக  அண்மைக்காலமாக ஞானசார தேரர் உட்பட சில சிங்கள அரசியல்வாதிகளும் பரப்பி வருகின்றனர் எனவும் பௌத்த மக்கள்  செறிந்து வாழும் பகுதிகளில் அவர்கள்  வாழும் இடங்களில் அவர்களுடைய மதவழிபாடுகளை மேற்கொள்வதற்கு தான் ஒரு போது் தடையானவனுமல்ல  எனவும் தன்னால் தடை போடவும் முடியாது எனவும்   எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிங்களும் தமிழர்களும் வாழும் பகுதிகளில் விஹாரைகளை எழுப்புவதும் சிலைகளை  வைப்பதும் தான் இன்று பிரச்சினையாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More