ஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தாக உயர்வடைந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் நான்கு ஐ.எஸ் தீவிரவாதிகளும் தொலைக்காட்சியின் பணியாளர்கள் நான்கு பேரும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளனர்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி தலிபான் தீவிரவாதிகள் செறிந்துள்ள பகுதி என்ற போதிலும் இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment