Home இந்தியா உத்தரப்பிரதேச கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாறவுள்ளனர்:-

உத்தரப்பிரதேச கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாறவுள்ளனர்:-

by admin


இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களில் பாதிக்கப்பட்ட 180 தலித் குடும்பத்தினர் புத்த மதத்திற்கு மாற இருப்பதாக அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹரான்புர் மாவட்டத்தில் கடந்த 5ம்திகதி ராஜ்புத் மன்னர் மஹாரானா பிரதாப் நினைவு தினம் ஒரு தரப்பினரால் கொண்டாடப்பட்டது. இதன்போது ஒலி பெருக்கியில் அதிக ஒலி இருப்பதாக அங்கு வசிக்கும் தலித் மக்கள் புகார் தெரிவித்துள்ளதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக் இரு தரப்பிலிருந்தும் பெருமளவானோர் கைது செய்து விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், அப்பகுதியைச் சுமார் 180 தலித் குடும்பத்தினர், தங்களுடைய குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்துவதாகவும், இதனால், புத்த மதத்தை தழுவ இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More