மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இவ்வாறு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக , பல்கலைக்கழகத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
மாணவர்களை புதிதாக சேர்ப்பதனை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே மாலம்பே தனியார் வைத்தியசாலை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment