அமைச்சரவையில் மாற்றம் செய்வது நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அடிப்படை பொருளாதார கொள்கைகளில் இந்த அமைச்சரவை மாற்றத்தின் ஊடாக எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உரிய பொருளாதார கொள்கைகளை பின்பற்றாது அமைச்சுப் பதவிகளில் நபர்களை மாற்றுவதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment