Home இலங்கை இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய முறையில் கவனிக்கப்படாமையினால் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உரிய முறையில் கவனிக்கப்படாமையினால் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு

by admin


அவுஸ்திரேலியாவில், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உரிய முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடுமையான ஆஸ்துமா நோயாளியான குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுகளுக்குள் பிரவேசித்து சில மணித்தியாலங்களில் அருள்செல்வம் வேல்முருகு என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்திருந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது. உரிய முறையில் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமையே இந்த புகலிடக் கோரிக்கையாளர் மரணத்திற்கான காரணம் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. West Australian coroner னால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More