காவல்துறை உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகள் குறித்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க அதிருப்தி வெளியிட்டுள்ளார். காவல்துறையினரின் சில நடவடிக்கைகள் நாட்டின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் சட்டம் அனைவருக்கும் சமமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment