Home இலங்கை வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில்

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் கையில்

by admin

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட  குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தமக்கு கிடைக்க பெற்றுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

வடமாகாணசபையின் 93ம் அமர்வு இன்றைய தினம் மாகணசபையின் பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.  இதன் போது எதிர்கட்சி தலைவர் சி.தவராசா ,

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சா ட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கான விசாரணை குழு ஒன்றை முதலமைச்சர் உருவாக்கினார் எனவும்  அந்த குழுவின் இறுதி அறிக்கை வந்துவிட்டதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு முதலமைச்சர் பதிலளிக்கையில், கடந்த 19.05.2017ம் திகதி இறுதி அறிக்கை கிடைத்துள்ளது எனவும்

 குறித்த விசாரணை குழுவின் இறுதி அறிக்கை தற்சமயம் ஆராயப்பட்டு வருவதாவும் அடுத்த அமர்வில் அந்த அறிக்கையை சபைக்கு சமர்பிப்பதா? இல்லையா? என்பது  அறிவிப்பேன் எனவும் பதிலளித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More