Home இலங்கை கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி 2017

கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி 2017

by admin
 கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக  கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017  இடம்பெற்றுள்ளது.
இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில்   கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட  பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது.
புதிய தொழிநுட்பத்துடன் பெருமளவுக்கு  கழிவுப்பொருட்களை மூலப்பொருட்களாக கொண்டு இலகுவாக வேலைகளை செய்யக் கூடிய  பல  புதிய கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இதனை பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் படையினர் உள்ளிட்ட பலர் பார்வையிட்;டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More