எகிப்தில் கொப்டிக் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொப்டிக் கிறிஸ்தவர்கள் பயணம் செய்த பஸ் ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
மினியா மாகாணத்திலிருந்து சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவொரு இயக்கமும் இதுவரையில் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் ஐ.எஸ் தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment