நிவாரணப் பொருட்கள் அடங்கிய இந்திய கப்பலொன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது. இன்றைய தினம் இந்தக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment