Home இலங்கை நாளை கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம்

நாளை கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம்

by admin

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்  மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையிலான சந்திப்பையடுத்து நாளை இசுருபாயவிலுள்ள கல்வியமைச்சில் தொண்டராசிரியர்கள் தொடர்பான விசேடக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாணசபையின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வியமைச்சின்  செயலாளர் சுனில்  ஹெட்டியராச்சி மற்றும் கல்வியமைச்சின் அதிகாரிகள் உட்பட கிழக்கு மாகாண சபை சார்பில்  பிரதம செயலாளர்,கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்,

இதன் போது கிழக்கின் தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான பொறிமுறைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளன. கிழக்கு முதலமைச்சரிடம் தொண்டராசிரியர்கள் அண்மையில் மகஜரொன்றை தமது நியமனத்தை துரிப்படுத்துமாறு கோரியிருந்ததையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போது தொண்டராசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் இதன் போது எடுத்துரைத்திருந்தார்,

இதனையடுத்து கல்வியமைச்சுடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு முதலமைச்சருக்கு பணிப்புரை விடுத்திருந்ததற்கமைவாக இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன் போது 2013 ஆண்டு வரையான தொண்டராசிரியர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என கிழக்கு முதல்வர் கோரிக்கை விடுத்திருந்ததுடன் இந்த விடயம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More