Home இலங்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென கோரிக்கை

by admin


இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் புலம்பெயர் சமூகம் உதவ வேண்டுமென நாடு கடந்த தமிழீழ இராச்சியம் கோரியுள்ளது. தென் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென  நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டுமென கோரியுள்ள அவர் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட காலமாக அனர்த்தங்களினால் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் போதிய முன் ஆயத்தங்கள் மற்றும் முன்எச்சரிக்கை நடவடி;ககைகள் அவசியம் என்பதே இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More