68
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமின் பிஸ்வநாத், ஜோர்கத், லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரண மாக அங்குள்ள 28 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மலைப்பகுதிகள் நிறைந்த பகுதியொன்றில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக குறித்த பகுதிகளில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மொநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் வெள்ள மீட்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love