இலங்கைக்கான நைஜீரிய தூதரகம் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இயங்கி வரும் ஐந்து தூதரகங்களை மூடுவதற்கு நைஜீரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நைஜீரிய தூதுவர் ஜிப்ரி ஒனியாமா இது குறித்து அறிவித்துள்ளார்.
இலங்கைக்கான நைஜீரிய தூதரகமும் இவ்வாறு மூடப்பட உள்ள தூதரகங்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். செலவு குறைப்பு நடவடிக்கையாக இவ்வாறு தூதரகங்கள் மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Add Comment