Home உலகம் லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது

லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரின் தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது

by admin

லண்டன் தாக்குதலை நடத்தியவர்களில் மூன்றாவது நபரை பற்றிய தகவலையும் பிரித்தானிய காவற்துறையினர் வெளியிட்டு உள்ளனர். இத்தாலியை சேர்ந்த தாய்க்கும் மொராக்கோவை சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்நபரின் பெயர் யூசுவ் சாக்பா – youssef Zaghva என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட, 27 வயது மதிக்கத்தக்க  குராம் பட் ((Khuram Butt ) மற்றும் 30 வயது மதிக்கத்தக்க, மொரோக்கோக்கோ மற்றும் லிபியாவுடன் தொடர்புபட்ட, ரஷீட் (Rachid Redouane ) ஆகியோரின் பெயர்கள் வெளியான நிலையில் இன்று 3 ஆவது தாக்குதல்தாரியின் பெயரும் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாதசாரிகள் மீது, வாகனத்தை மோதியும், கத்தியால் குத்தியும், மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் சம்பவத்தில், 7 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More