Home உலகம் வேடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

வேடிக்கை – செல்வரட்னம் சிறிதரன்

by admin

ஜன­நா­ய­கத்தைக் கட்டிக் காத்து, நல்­லாட்சி புரியப் போவ­தாக உறு­தி­ய­ளித்து அதி­கா­ரத்­திற்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னைய அர­சாங்­கத்தின் போக்­கி­லேயே சிறு­பான்­மை­யின மக்­களை அடக்கி ஒடுக்­கு­வதில் மறை­மு­க­மாக தீவிர கவனம் செலுத்தி வரு­கின்­றதோ என்ற ஐயப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

முன்­னைய அர­சாங்கம் விடு­த­லைப்­பு­லி­களை இரா­ணுவ ரீதி­யாகத் தோற்­க­டித்­ததன் மூலம் நாட்டில் நில­விய பயங்­க­ர­வாத நிலை­மைக்கு முற்­றுப்­புள்ளி இட்­டது என்றும், பயங்­க­ர­வா­தத்தின் பிடியில் இருந்து இரா­ணு­வத்­தினர் நாட்­டிற்கு விடு­த­லையைப் பெற்­றுக்­கொ­டுத்­தார்கள் என்றும் பிர­சாரம் செய்­தது.

ஆயுத ரீதி­யான பயங்­க­ர­வா­தத்தை ஒழித்­த­தாக பெருமை பேசிய அந்த அர­சாங்­கத்தை வீட்­டுக்கு அனுப்­பிய நல்­லாட்சி அர­சாங்கம் மறை­மு­க­மாக – திரை மறைவில் மற்­றுமோர் வடி­வத்­தி­லான பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­களை ஊக்­கு­விக்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்­திற்கே பயங்­க­ர­வாதம் என பெயர் சூட்­டப்­பட்­டி­ருந்­தது. தார்­மீக வழியில் தமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காகப் போரா­டிய தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளையும், தமிழ் மக்­க­ளையும் அடக்­கி­யொ­டுக்­கி­யதன் விளை­வா­கவே ஆயுதப் போராட்டம் தலை தூக்­கி­யி­ருந்­தது.

ஆயுதப் போராட்­டத்தின் அழுத்தம் கார­ண­மாக, அர­சியல் தீர்­வுக்­காக விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் பேச்சுவார்த்­தைகள் நடத்­தப்­பட்­டதை, பேச்­சு­வார்த்தை நடத்­திய அர­சாங்­கங்­களும் அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் இலாபம் கருதி மறந்­து­விட்­டார்கள். மறைத்தும் விட்­டார்கள். அந்தப் பேச்சு­வார்த்­தைகள் பற்றி எவரும் இப்­போது கருத்து கூறு­வ­தில்லை. மாறாக, அர­சியல் தீர்­வுக்­காக சரி­சம­ம­ாக அமர்ந்து பேச்­சு­வார்த்­தைகள் நடத்­திய விடு­த­லைப்­பு­லி­களை வாய் கூசாமல் பயங்­க­ர­வா­திகள் என்றே குறிப்­பி­டு­கின்­றார்கள். தேவை­யா­ன­போது அவர்­களை சாடு­வ­தற்கும் அவர்கள் தயங்­கு­வ­தில்லை.

இது முன்­னைய பயங்­க­ர­வாதம். ஆனால் தற்­போது குறிப்­பி­டப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாதம் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்­க­ளா­கவும், இன, மத ரீதி­யான வெறுப்­பூட்டும் பரப்­பு­ரை­க­ளா­கவும் இனம் காணப்­பட்­டி­ருக்­கின்­றன.

நாட்டின் பெரும்­பான்மை இன மக்­களின் சம­ய­மா­கிய பௌத்த மதத்­திற்கே அதி­கா­ர­பூர்­வ­மாக முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனைய சிறு­பான்மை இன மக்­களின் மதங்­க­ளுக்கு அர­சி­ய­ல­மைப்பில் உரிய இடமும் உரி­மை­களும் வழங்­கப்­பட்­டுள்ள போதிலும் நடை­மு­றையில் அவைகள் உரிய முறையில் கணக்கில் எடுத்துக் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

பௌத்­தர்கள் இல்­லாத இடங்­களில் எல்லாம் புத்த பெரு­மா­னு­டைய சிலை­களை நிறு­வு­வதும், பௌத்த விகா­ர­கைளை நிர்­மா­ணிப்­பதும் பௌத்த மதத்­திற்கே உரிய தனித்­து­வ­மான உரி­மை­யாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அவ்­வாறு புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் அமைக்­கப்­ப­டும்­போது, அதற்கு எதிர்ப்பு தெரி­விப்­ப­வர்­களின் நியா­ய­மான கோரிக்­கைகள் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டு­கின்ற பொலிஸார் இது தொடர்­பான முறைப்­பா­டு­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தில்லை. அத்­த­கைய முறைப்­பா­டுகள் பொலிஸ் நிலை­யங்­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத போக்கு காணப்­ப­டு­கின்­றது. ஓரிரு பொலிஸ் நிலை­யங்­களில் அத்­த­கைய முறைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டா­லும்­கூட, அது ஒரு கண்­து­டைப்பு நட­வ­டிக்­கை­யா­கவே இடம்­பெற்று வரு­கின்­றது. அந்த முறைப்­பா­டுகள் குறித்து பொலிசார் உரிய சட்ட நட­வ­டிக்­கைகளை எடுப்­ப­தற்கு முன்­வ­ரு­வ­தில்லை.

சட்டம் ஒழுங்கை நிலை­நாட்ட வேண்­டிய பொலிஸார் இவ்­வாறு நடந்து கொள்­கின்ற அதே­வேளை, இந்த அத்­து­மீ­றிய மத­ரீ­தி­யான ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் குறித்து அர­சாங்­கமும் அலட்டிக் கொள்­வ­தில்லை.

தமிழ் மற்றும் முஸ்லிம் பிர­தே­சங்­களில் பௌத்­தர்கள் எவரும் நிரந்­த­ர­மாகக் குடி­யி­ருக்­காத பிர­தே­சங்­களில் நிறு­வப்­ப­டு­கின்ற புத்தர் சிலை­க­ளையும், பௌத்த விகா­ரை­க­ளையும் மத ரீதி­யான ஒரு சகிப்புத் தன்­மைக்­கா­கவே சிறு­பான்மை இன மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்ற ஒரு போக்கும் காணப்­ப­டு­கின்­றது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்­களில் முகாம்­களை அமைத்து நிலை­கொண்­டி­ருந்த இரா­ணு­வத்­தினர் தமது ஆன்­மிக வழி­பாட்­டுக்­காக நிரந்­த­ர­மாக புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விகா­ரை­க­ளையும் அமைத்­தி­ருந்­தார்கள். அவ்­வாறு அமைக்­கப்­பட்ட புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் அவ்வி­டங்­களில் இருந்து இரா­ணு­வத்­தினர் வெளி­யேறிச் செல்­லும்­போது அகற்­றப்­ப­டு­வ­தில்லை.

அவ்­வாறு அகற்­றப்­ப­டாத புத்தர் சிலை­களும், பௌத்த விகா­ரை­களும் கவ­னிப்­பா­ரின்றி காணப்­ப­டு­வ­துடன், பேரி­ன­வாத ஆக்­கி­ர­மிப்பின் அடை­யா­ள­மா­கவே மிஞ்­சி­யி­ருக்­கின்­றன. யாரேனும் விஷ­மிகள் இந்த புத்தர் சிலை­யையோ அல்­லது பௌத்த விகா­ரை­யையோ சேத­மாக்­கினால், அது பௌத்த மதத்­திற்கு எதி­ராகத் தொடுக்­கப்­பட்ட பெரும் தாக்­கு­த­லாகப் பிர­சா­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இத்­த­கைய ஒரு சம்­பவம் வவு­னியா மாவட்டம் கன­க­ரா­யன்­கு­ளத்தில் நடை­பெற்­றது. அங்கு படை­யினர் நிலை­கொண்­டி­ருந்த இடத்­திற்கு அப்பால் நிறு­வப்­பட்­டி­ருந்த புத்தர் சிலையை அடை­யாளம் தெரி­யாத யாரோ சிதைத்துவிட்­டார்கள்.

இந்தச் சம்­பவம் மிக மோச­மான எதிர்­வி­னை­களை ஏற்­ப­டுத்­தி­வி­டுமே என்று அந்தப் பிர­தே­சத்தில் அந்த புத்தர் சிலை நிறு­வப்­பட்­டி­ருந்த .இடத்­திற்கு அப்பால் வசித்த ஊர் மக்கள் கவ­லை­ய­டைந்­தி­ருந்­தார்கள். இந்த சிலை உடைப்பு சம்­ப­வ­ம­ானது திட்­ட­மிட்ட ஒரு செயற்­பா­டாக இடம்­பெ­ற­வில்லை. அதற்கு எந்­த­வி­த­மான அர­சியல் பின்­ன­ணியோ, உள்­நோக்­கமோ எவ­ருக்கும் இருந்­த­தாகத் தெரி­ய­வில்லை. ஆனால், அந்தச் சம்­பவம் தென்­னி­லங்­கையில் பௌத்த மதத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான மத­வாத தாக்­குதல் சம்­ப­வ­மாக சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தச் சம்­பவம் தொடர்பில் தென்­னி­லங்­கையின் தனியார் வானொ­லிகள் உள்­ளிட்ட ஊட­கங்கள் மத­வா­தத்தைத் தூண்டும் வகையில் பெரும் பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்­தி­ருந்­தன. பௌத்த மதத்­திற்குப் பேர­ழிவு ஏற்­பட்­டு­விட்­ட­தா­கவே அந்தப் பிர­சா­ரத்தில் கருத்து வெளி­யிட்ட பௌத்த மதம் சார்ந்த பலரும் தெரி­வித்­தார்கள்.

அந்தச் சம்­பவம் இடம்­பெற்ற இடத்­திற்கு விஜயம் செய்த பௌத்த மத குருக்கள் அடங்­கிய குழு­வினர், அந்தப் பிர­தே­சத்­திற்குப் பொறுப்­பான பொலிஸ் அதி­கா­ரி­களின் உத­வி­யோடு உள்ளூர் மக்­களைச் சந்­தித்துப் பேச்­சுக்கள் நடத்­தி­னார்கள். அந்தப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது, அந்தச் சம்­ப­வத்­திற்கும் ஊர் மக்­க­ளுக்கும் எந்­த­வித சம்­பந்­தமும் இல்லை என்­பது தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது. மத­வா­தத்தைத் தூண்டி இனக் கல­வரம் ஒன்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக யாரோ விஷ­மிகள் வேண்டும் என்று செய்த ஒரு கைங்­க­ரியம் என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. பௌத்த மதத்தின் மீது தங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான கோப தாபமோ வெறுப்போ கிடை­யாது என்­பதை எடுத்­து­ரைத்து, தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கிய அந்த இடத்தைப் பேணிப் பாது­காப்­ப­தாக ஊர்ப் பெரி­ய­வர்­களும் இந்து மத முக்­கி­யஸ்­தர்­களும் உறு­தி­ய­ளித்­தார்கள். அதன் பின்னர், பௌத்­தர்கள் எவ­ருமே இல்­லாத அந்த இடத்தில் உடைக்­கப்­பட்ட புத்தர் சிலைக்குப் பதி­லாகப் புதிய புத்தர் சிலை பௌத்த மத முறைப்­படி ஸ்தாபிக்­கப்­பட்­டது.

அத­னை­ய­டுத்து, அந்தப் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள், இந்த புத்தர் சிலை உடைப்பு விடயம் பெரும் கல­வ­ரத்தை உரு­வாக்­காத வகையில் அமை­தி­யான முறையில் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டதே என்று எண்ணி நிம்­மதி பெரு­மூச்­சு­விட்­டார்கள்.

அதே­நேரம் வடக்­கிலும் கிழக்­கிலும் இந்­துக்­களும் ஏனைய மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் வாழ்­கின்ற பல இடங்­களில் இந்துக் கோவில்கள் அமைந்­துள்ள காணி­க­ளிலும், ஏனைய பொது இடங்­க­ளிலும் பௌத்த விகா­ரைகள், பௌத்த மதத்­தி­னரால் அத்­து­மீ­றிய வகையில் நிறு­வப்­பட்­டி­ருக்­கின்­றன. இவ்­வா­றான பல இடங்­களில் புத்தர் சிலை­களும் நிறு­வப்­பட்­டி­ருக்­கின்­றன.

பௌத்த துற­வி­களின் இத்­த­கைய அத்­து­மீ­றிய நட­வ­டிக்­கைகள் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லு­ற­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் பாதித்து, மத ரீதி­யான வெறுப்­பு­ணர்­வை­யூட்­டு­வ­தற்கே வழி வகுக்கும் என்­பதை அர­சாங்­கமோ அல்­லது பொலிஸாரோ உணர்ந்து அத்­த­கைய நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு முன்­வந்­த­தில்லை.

இத்­த­கைய மத ரீதி­யான ஆக்­கி­ர­மிப்புச் செயற்­பா­டுகள் குறித்து தமிழ் பாராளுமன்ற உறுப்­பி­னர்கள் பாராளு­மன்­றத்தின் கவ­னத்­திற்குப் பல தட­வைகள் கொண்டு வந்­துள்­ள­போ­திலும், அது செவிடன் காதில் ஊதிய சங்­கா­கவே முடிந்­தி­ருக்­கின்­றது.

இது மட்­டு­மல்ல. பொது­பல சேனா என்ற பௌத்த தீவி­ர­வாத அமைப்பின் செய­லா­ள­ரா­கிய கல­கொட அத்தே ஞான­சார தேரர் வெளிப்­ப­டை­யா­கவே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மத­ரீ­தி­யான வெறுப்­பூட்டும் பிர­சா­ரங்­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வந்­துள்ளார். அத்­து­மீ­றிய அவ­ரு­டைய பிர­சார செயற்­பா­டு­க­ளி­னாலும், முஸ்லிம் மதத்தை மலி­னப்­ப­டுத்தும் வகை­யி­லான நிந்­தனை செய்யும் கருத்­துக்­க­ளி­னாலும் முஸ்­லிம்கள் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­னார்கள்.

மதம் பிடித்­தது போன்ற ஞான­சா­ர­ரு­டைய மத­வாத நிந்­தனை கருத்­துக்­களும், முஸ்லிம் குடி­யி­ருப்­புக்­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அவ­ரு­டைய சகாக்கள் சென்று தாக்­குதல் நடத்­திய நட­வ­டிக்­கை­களும் நாட்டில் அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்குக் கார­ண­மாக அமைந்­தி­ருந்­தன. களுத்­துறை மாவட்­டத்தில் அளுத்­கம, தர்கா நகர், பேரு­வளை ஆகிய இடங்­களில் 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம், 17 ஆம் திகதி வரை­யி­லான தினங்­களில் சிங்­கள பௌத்த தீவி­ர­வாத குழு­வினர் முஸ்­லிம்கள் மீதும், அவர்­க­ளு­டைய வீடுகள் வர்த்­தக நிலை­யங்கள் மீதும் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­குதல் நடத்­திய சம்­பவம் அரங்­கே­றி­யி­ருந்­தது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த வன்­மு­றையின் போது நான்கு பேர் உயி­ரி­ழந்­தார்கள். எண்­பது பேர் வரையில் காய­ம­டைந்­தார்கள். பத்­தா­யிரம் பேர் இடம்­பெ­யர நேர்ந்­தது. இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் இரண்­டா­யிரம் பேர் சிங்­க­ள­வர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

நாட்டில் யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் இடம்­பெற்ற மிக மோச­மான இந்த வன்­மு­றைக்குக் கார­ண­மா­ன­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. கைது செய்­யப்­ப­ட­வு­மில்லை. பிர­தான ஊட­கங்­களில் இந்த வன்­முறை சம்­ப­வங்கள் தொடர்­பான தக­வல்கள் முழு அளவில் வெளி­வ­ரக்­கூ­டாது என்று அன்­றைய அர­சாங்கம் எச்­ச­ரிக்கை செய்­தி­ருந்­தது என்­பதும் பல­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­திய பேரணி மற்றும் மத நிந்­தனை கருத்துக்களே இந்த வன்­மு­றைக்குத் தூப­மிட்­டி­ருந்­தன என்று கண்டறி­யப்­பட்­டி­ருந்த போதிலும், பொது அமை­திக்குப் பங்கம் விளை­வித்து வன்­மு­றையைத் தூண்டி விட்­ட­மைக்­காக எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையும் இன வெறுப்பு கருத்து வெளி­யீட்டுப் பிர­சார நட­வ­டிக்­கை­களும் அத்­து­டன நின்­று­வி­ட­வில்லை. ஆட்சி முறையில் 2015 ஆம் ஆண்டு மாற்றம் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து, சிறிது காலம் அமை­தி­யாக இருந்த பொது­பல சேனா அமைப்­பினர் கடந்த ஏப்ரல் மே மாதங்­களில் மீண்டும் சுறு­சு­றுப்­ப­டைந்­தனர். கிழக்கு மாகா­ணத்­திலும் ஏனைய தென்­ப­குதி மாவட்­டங்­க­ளிலும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது தாக்கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. இனந்­தெ­ரி­யாத வகையில் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குத் தீயி­டப்­பட்­டன.

இந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஞான­சார தேரரின் மத வெறுப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தும் கருத்து வெளிப்­பாடும், அவ­ரு­டைய தலை­மை­யி­லான குழு­வி­ன­ரது செயற்­பா­டு­க­ளுமே காரணம் என தக­வல்கள் வெளி­யா­கிய போதிலும், சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்டம் தனது கரங்­களை நீட்­ட­வில்லை.

கிழக்கில் இறக்­காமம், பொலன்­ன­றுவை மற்றும் குரு­ணா­கல் போன்ற இடங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற வன்­முறை தாக்­குதல் சம்­ப­வங்­களில் ஞான­சார தேரர் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டி­ருந்­த­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. இரு­ப­துக்கும் மேற்­பட்ட இத்­த­கைய சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இவை தொடர்­பான முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட பர­வ­லான தாக்­கு­தல்கள் வர்த்­தக நிலை­யங்கள் தீயி­டப்­பட்ட சம்­ப­வங்கள் என்­பன நாட்டில் இன, மத ஐக்­கி­யத்­திற்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தி, தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருக்­கின்­றன என்­பது பல­ராலும் அர­சாங்­கத்­திற்கு உணர்த்­தப்­பட்­டது. இந்த அமை­தி­யின்மை நிலை­மை­யா­னது நாட்­டிற்குள் பல­ராலும் கண்­டிக்­கப்­பட்­டது. அதே­போன்று சர்­வ­தேச மட்­டத்­திலும் கண்­ட­னங்கள் வெளி­யி­டப்­பட்­டன.

இதன் பிந்­திய நிலை­மை­யாக, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்தத் தவ­றினால், இலங்கை அர­சாங்­கத்­திற்கு மீண்டும் வழங்­கப்­பட்­டுள்ள ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கை­யா­னது மீண்டும் பரி­போக நேரி­டலாம் என்று இலங்­கைக்­கான ஜேர்மன் தூதுவர் எச்­ச­ரிக்கை செய்­துள்ளார்.

இனக்­கு­ழு­மங்­களின் உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்டும் என்­பது ஐ.நா. சாச­னங்­களில் ஒன்­றாகும். அதனை ஏற்று நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக இலங்கை வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. ஐ.நா. சாச­னங்­களை நிறை­வேற்­று­வது தொடர்பில் அளிக்­கப்­பட்­டுள்ள உறு­தி­மொ­ழி­களை அர­சாங்கம் கடைப்­பி­டிக்க வேண்டும். அதனைக் கடைப்­பி­டிக்கத் தவ­றினால் ஜீ.எஸ்.பி. சலுகை நிறுத்­தப்­படக் கூடும் என்­பது தெளி­வாக அர­சாங்­கத்­திற்கு எடுத்­து­ரைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­யுள்தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெறும் வன்­மு­றைகள் தொடர்பில் நாங்கள் கரி­சனை கொண்­டுள்ளோம். ஜிஎஸ்பி வரிச்­ச­லுகை என்­பது ஒரு சலுகை. அதனை வழங்க வேண்டும் என்ற கட்­டாயம் கிடை­யாது. ஆயினும் ஐ.நா. சாச­னங்­களை நிறை­வேற்றத் தவ­றினால் மாற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டலாம் என்றும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் சம்­ப­வங்­க­ளா­னது நவீன பயங்­க­ர­வா­த­மா­கவே அவ­தா­னி­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றது. பிரஜை ஒருவர் தான் விரும்­பிய ஒரு கொள்­கையை, மத நம்­பிக்­கையைப் பின்­பற்­று­வ­தற்கும் கருத்­துக்­களைச் சுதந்­தி­ர­மாக வெளி­யி­டு­வ­தற்கும் உரித்­து­டை­ய­வ­ராவார். இது ஒரு­வ­ரு­டைய உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட அடிப்­ப­டைய உரி­மை­யாகும். இந்த உரிமை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பில் உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது.

அவ்­வாறு உறுதி செய்­யப்­பட்ட உரி­மையை மறுக்கும் வகையில் செயற்­ப­டு­வ­தற்கு எவ­ருக்கும் உரிமை கிடை­யாது. அவ்­வாறு செயற்­ப­டு­வதும், அதற்­காக (வன்­மு­றையை) பலத்தைப் பிர­யோ­கிப்­பதும், அதன் ஊடாக அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு ஊறு விளை­விப்­பதும் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகக் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள வன்­மு­றைகள் அர­சாங்­கத்­திற்கு நேர­டி­யாக எதி­ரா­ன­வை­யாக இல்­லாத போதிலும், இனக்­குழுமம் ஒன்றின் இருப்­புக்கும், அதன் மத உரிமை கருத்துச் சுதந்­திர உரிமை என்­ப­வற்­றுக்கு ஊறு ஏற்­ப­டுத்தும் வகையில் வன்­மு­றையைப் பிர­யோ­கிப்­பது நவீன பயங்­க­ர­வா­த­மா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

சிங்­கள ராவய, ராவணா பலய, மகாசன் பலய, சிங்­கள ஜாதிக பலய, சிங்­களே போன்ற பல்­வேறு சிங்­களத் தேசப்­பற்­றாளர் அமைப்­புக்­க­ளான சிங்­கள பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­களை உள்­ள­டக்­கி­யதே பொது­பல சேனா அமைப்­பாகும். இந்த அமைப்­பைச்­சேர்ந்த பல்­வேறு குழு­வினர் முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­தவ மதம் என்­ப­வற்­றுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்­றனர்.

கடந்த அர­சாங்க காலத்தில் உரு­வாக்­கப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்­பா­னது, முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வந்­துள்­ளனர். இந்த வன்­முறை போக்கை அர­சாங்கம் சட்ட ரீதி­யாகக் கட்­டுப்­ப­டுத்­தா­விட்டால், நாள­டைவில் அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் அர­சாங்­க­த்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யா­கவும் திசை மாறக்­கூடும். அவ்­வாறு திசை மாறும்­போது அது சர்­வ­தேச வரை­மு­றைக்கு அமைய பயங்­க­ர­வாதச் செயற்­பா­டாக நிச்­சயம் மாற்­ற­ம­டையும். அது சர்­வ­தேச அள­வி­லான பயங்­க­ர­வா­த­மாகக் கணிக்­கப்­படக் கூடிய ஆபத்தும் உள்­ளது.

ஆனால் நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வுக்கு அமை­வாக ஞான­சார தேரர் தேடப்­பட்டு வரு­கின்றார். வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மா­னவர் என்ற சந்­தே­கத்தில் தேடப்­ப­டு­கின்ற அவரைக் கைது செய்­வ­தற்கு பொலிசார் பின்­வாங்­கி­யி­ருக்­கின்­றனர் என்ற குற்­றச்­சாட்டு வெளிப்­ப­டை­யா­கவே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தின் உத்­த­ர­வுக்­க­மைய நான்கு பொலிஸ் குழுக்கள் தலை­ம­றை­வா­கி­யுள்ள ஞான­சார தேரரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆயினும் அந்தக் குழுக்கள் இன்­னுமே அவரைக் கண்­டு­பி­டிக்­க­வில்லை. அவரைக் கைது செய்­ய­வு­மில்லை.

அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ள­ரா­கிய அமைச்சர் ராஜித சேனா­ரத்ன, தலை­ம­றை­வா­கி­யுள்ள ஞான­சார தேரர், அமைச்சர் ஒரு­வரின் பாது­காப்பில் இருக்கக் கூடும். அதன் கார­ண­மா­கவே அவரைக் கைது செய்ய முடி­யா­தி­ருக்­கின்­றதோ என்று சந்­தேகம் வெளி­யிட்­டி­ருக்­கின்றார். பௌத்த பிக்கு ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் இயலாமல் இருப்பது குறித்து அமைச்சர் ஒருவர் அரசாங்கத் தரப்பில் இருந்து இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.

அதேவேளை, பொலிஸார் தமது கடமையைச் செய்யாவிட்டால், இராணுவத்தை அழைக்க வேண்டியிருக்கும் என்று ஜனாதிபதி கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுவும் வேடிக்கையாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்ற ஜனாதியதி பொலிஸாருக்கு இறுக்கமாக உத்தரவிடுவாரேயானால், அதனை அவர்கள் கட்டாயம் நிறைவேற்றுவார்கள். ஒருவரைக் கைது செய்வதென்பது சிவில் நிர்வாகத்தில் பொலிஸாரின் கடமையாகும். அதனை அவர்கள் எந்த வகையிலும் நிறைவேற்றுவார்கள்.

ஆனால் ஞானசார தேரரைக் கைது செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள தாமதமும், கூறப்படுகின்ற காரணங்களும் அரசாங்கம் இந்த விடயத்தை சுய அரசியல் நோக்கம் ஒன்றின் அடிப்படையில் கையாள்கின்றதோ என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல், சிங்கள மக்களும் நம்பிக்கை இழந்து வருகின்ற ஒரு சூழலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசியல் செல்வாக்கு அதிகரித்து வருவதான ஒரு போக்கும் காணப்படுகின்றது.

இந்த நிலையில் தீவிரவாத போக்கில் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்ற மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாடுகளை முடக்குவதற்காகவே ஞானசார தேரரைக் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது என்ற கருத்தும் வெளிப்பட்டிருக்கின்றது.

எது எப்படியானாலும் நவீன பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு சுட்டிக்காட்டத்தக்க வகையிலான வன்முறைச் செயற்பாடுகளுக்கு பௌத்த மத குரு ஒருவரின் தலைமையில் பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களின் போக்குக்கு ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பது என்பது நல்லாட்சி அரசாங்கத்தையும் நாட்டையும் எதிர்காலத்தில் பெரும் சிக்கல்களில் கொண்டு விடுவதற்கான ஒரு வழிமுறையாகும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்த நிலைமையில் இருந்து நாட்டை சரியான வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டியது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மிக முக்கியமான பொறுப்பாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More