Home இலங்கை “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

by admin

“ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தின் கணனி தரவுக் கட்டமைப்பானது இலங்கை மொபிடெல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன், இன்று (12) முற்பகல் அது ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேனவினால் அதற்குரிய ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெரும, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் வசந்த தேசப்பிரிய ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

1919 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல் மையத்துடன் தொடர்புகொள்வதன் மூலமாகவோ அல்லது இணையம், மின்னஞ்சல் மற்றும் தபால் ஊடாக ஜனாதிபதி செயலகத்திற்கோ பொது மக்கள் தமது முறைப்பாடுகள், குறைகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதுடன், பெறப்படும் முறைப்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தின் பொது மக்கள் தொடர்பாடல் பிரிவினால் பரிசீலிக்கப்பட்டு உரிய முறைப்பாடுகள், குறைகள் என்பவற்றின் மேலதிக செயற்பாடுகளுக்காக  உரிய அமைச்சிற்கு அல்லது நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் ஊடககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More