Home விளையாட்டு மோசமான களத்தடுப்பினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது இலங்கை

மோசமான களத்தடுப்பினால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது இலங்கை

by admin


மோசமான களத்தடுப்பு காரணமாக ஐ.சீ.சீ சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பினை இலங்கை அணி இழந்துள்ளது.  நேற்றைய தினம் கார்டிப் மைதானத்தில் இலங்கைக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்கைளப் பெற்றுக் கொண்டது.

இதில் நிரோசன் திக்வெல்ல 73 ஓட்டங்களையும் அன்ஜலோ மெத்யூஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் ஜூனைட் கான் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் ஏழு விக்கட்டுகளை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் அணித் தலைவர் சப்ராஜ் அஹமட் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களையும், பாகர் ஸாமான் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். போட்டியில் வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பு இலங்கை அணிக்கு இறுதி நேரம் வரையில் காணப்பட்ட போதிலும் மோசமான களத்தடுப்பு காரணமாக வெற்றி வாய்ப்பினை இழந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More