உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மத் ஸகாவுல்லாஹ் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்றையதினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
யுத்த காலத்திலும் சமாதான காலப்பகுதியிலும் இலங்கையுடனான பாகிஸ்தானின் நெருங்கிய தொடர்புகளுக்கு ஜனாதிபதி இச்சந்திப்பின்போது நன்றி தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் கடற்படைக்கும் பாகிஸ்தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அட்மிரல் ஸகாவுல்லாஹ் தெரிவித்தார்.
Add Comment