பழிவாங்க வேண்டுமாயின் எங்களிடம் பழிவாங்கவும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற நாமல் ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க கூறிய போதிலும், அனர்த்தம் ஏற்பட்டு 13 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தில் இணைந்து கொண்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர், மாவட்டச் செயலாளர்களிடம் கோரியிருந்தார்.
தம்முடன் இணைந்து கொண்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது, பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு நிலைமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நாமல் ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். பழிவாங்க வேண்டுமாயின் தம்மை பழிவாங்குமாறும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.
Add Comment