புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று முதல் புகையிரத பாதைகளில் நடந்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற விபத்துக்கள் காரணமாக இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இரண்டு சகோதரர்கள் புகையிரத பாதையில் செல்பீ புகைப்படம் எடுத்துக்கொண்ருந்த போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment