புலம்பெயர் புலி அமைப்புகளை திருப்திப்படுத்தவா அல்லது ஜெனிவாவில் உள்ளவர்களை மகிழ்விக்கவா தம்மை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர் என்ற சந்தேகம் எழுவதாக என முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அர்த்தமில்லாத விசாரணைகளில் தன்னை தொடர்புபடுத்தி விட்டு தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் அவா தெரிவித்துள்ளார். பாரிய நிதி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்காக முன்னிலையாகியதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
Spread the love
Add Comment