Home இந்தியா அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை

அற்புதம்மாள் சட்டத்துறை அமைச்சரை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு கோரிக்கை

by admin


ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்திய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த   அற்புதம்மாள்  தனது மகன் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பலரும் முயற்சி எடுத்தனர் எனவும்   அவர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பத்திரிகைகளும், தொலைக்காட்சி, சமூக ஊடகங்களும் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறதென தெரிவித்த அவர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எதனது மகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக் காக கடும் முயற்சி எடுத்தார் எனவும் தெரிவித்தார்.

தற்போது தனது னது கணவரின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவரை பார்ப்பதற்கு தனது மகனுக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More