குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த ஆண்டில் இலங்கையில் சுமார் 9 லட்சம கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய ஆபத்தான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் 2லட்சத்து ஆறாயிரத்து 693 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தொகையான போதைப் பொருட்கள் மேல் மாகாணத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Add Comment