Home இலங்கை இவ்வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 525 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – பழனி திகாம்பரம்

இவ்வருடம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 525 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை – பழனி திகாம்பரம்

by admin

இலங்கையில் கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மண் சரிவில் பாதிக்கப்பட்ட 516  குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மலைநாட்டு புதிய  கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நிலவிய சீரற்ற காலநிலையால் நாடெங்கிலும பாதிக்கப்பட்ட  மக்கள் பலர் தங்களது இருப்பிடங்களையும், உடமைகளையும் இழந்து முகாம்களில் தங்களது அன்றாட கடமைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது அமைச்சினூடாக 525 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெகுவாக பாதிக்கப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தில் 209 வீடுகள், காலி மாவட்டத்தில் 155 வீடுகள், கேகாலையில் 8 வீடுகள், நுவரெலியா மாவட்டத்தில் 100 வீடுகள், 525 வீடுகள், பதுளை மாவட்டத்தில் 53 வீடுகள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More