குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தலைவர்களுக்கு இடையில் ஒற்றுமை மிகவும் அவசியமானது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சாந்து தெரிவித்துள்ளார்.
முதல் தடவையாக அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் தமிழ் தலைவர்கள் இணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகள், பொருளாதார மற்றும் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற மிகவும் அவசியமானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறnனினும் தாம் நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment