குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியின் புதிய செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் ஜனாதிபதியின் செயலாளராக கடமையாற்றிய சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி பீ.பி. அபயகோன் தனது பதவி விலகியிருந்தார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அவர் இவ்வாறு பதவி விலகியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரியான ஒஸ்டின் பெர்னாண்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒஸ்டின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க ஆட்சி காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக கடயைமாற்றியுள்ளதுடன், அண்மையில் கிழக்கு மாகாண ஆளுனராகவும் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment