Home இலங்கை மட்டக்களப்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்:

மட்டக்களப்பில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்:

by admin

மட்டக்களப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு    காணாமல் போன சம்பவம் தமிழ் இளைஞர்கள் இருவர் தொடர்பில், அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த இரு இளைஞர்களும் கடந்த 2007ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் திகதி மட்டக்களப்பு காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினரால் தெரிவிக்கபட்ட போதும்   அவர்கள் வீடு திரும்பாத நிலையில் அவர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறும் தெரிவித்து  மட்டக்களப்பை சேர்ந்த செல்வராஜா புஸ்பராணி மற்றும் அன்னாமலை செல்வராஜா ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த  மனுவை  இன்றையதினம் விசாரித்த நீதிபதிகள் மனுதாரர்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் எனவும் தீர்ப்பளித்தனர்.

அத்துடன்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் தலா 10 இலட்சம் ரூபா நஸ்டஈடாக வழங்கப்பட வேண்டும் எனவும் நீதியரசர்கள்  உத்தவிட்டுள்ளனர்.

அத்துடன், இதற்கு மேலதிகமாக, இளைஞர்கள் கைது சேய்யப்பட்ட போது  மட்டக்களப்பு காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக இருந்த  பீ,எஸ்.விக்ரமரத்னவை அவரது  சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு ஐம்பதாயிரம்  ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More