குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இராணுவத் தளபதி பதவிக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இன்று முதல் லெப்டினன் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுக் கொள்ள உள்ளார்.
இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஜெனரல் கிறிசாந்த டி சில்வா கூட்டுப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட உள்ளார்.
Spread the love
Add Comment