Home இந்தியா அருந்ததி ராய் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது:-

அருந்ததி ராய் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது:-

by admin


டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கடந்த 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சாய்பாபாவுக்கு ஆதரவாக அருந்ததி ராய் வார இதழ் ஒன்றில் கட்டுரையில் எழுதியிருந்தார்.

இதையடுத்து அவர் மீது மும்பை நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த அவமதிப்பு வழக்குக்கு தடை விதிக்கக் கோரி அருந்ததி ராய் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பதிலளித்த அருந்ததி ராய், ‘ஜனநாயகத்தில் அரசு, நீதிமன்றம் உள்ளிட்டவைகளில் உள்ள குறை களைக் கூறவும், வெளிப்படுத்தவும் குடிமகன் தனக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துகிறார். இந்த எதிர்ப்புதான் உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை. எதிர்ப்பு என்பது புனிதமானது மற்றும் ஜனநாயகம் தழைத்தோங்க தவிர்க்க முடியாதது ஆகும்’ என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். ஹேகர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதிஇந்த வழக்கில் அருந்ததி ராய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால் வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அருந்ததி ராயின் சட்டத்தரணி இது மன்னிப்புக் கேட்கும் வழக்கு கிடையாது எனத் தெரிவித்ததனை அடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு, மும்பை நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More