குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்ற சட்டங்கள் நிறைவேற்றப்படும் வரையில் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சட்டத்தை நிறைறே;றும் வரையில் தேர்தல் நடத்தக்கூடிய சாத்தியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேவையான நேரத்தில் அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த சட்டத்தை அமுல்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment