குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டெங்கு நோய் பரவக்கூடிய பிரதேசங்களில் காணப்படும் பாடசாலை மாணவர்கள் விசேட ஆடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கல்வி அமைச்சினால் இது குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுளம்புகள் தாக்காத வகையில் உடலை மூடும் வகையில் ஆடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நுளம்புக் கடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வகையில் ஆடைகள் அணிய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment