Home இலங்கை ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை ஓர் பிரச்சினையேயாகும் – அர்ஜூன ரணதுங்க

ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை ஓர் பிரச்சினையேயாகும் – அர்ஜூன ரணதுங்க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமை ஒர் பிரச்சினையேயாகும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் அவை சரியான முறையில் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக தற்போதைய அரசாங்கம் ராஜபக்ஸக்களுக்கு எதிராக பொய்யுரைத்துள்ளதாக தெரிவிக்கக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினால் எதிர்காலத்தில் தான் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநேக சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More