குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்ட மா அதிபரின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் தலையீடு செய்ய அனுமதி கிட்டியமை ஓர் மாபெரும் வெற்றியாகவே கருதப்பட வேண்டுமென சங்கத்தின் செயலாளர் ஹரித் அலுத்கே தெரிவித்துள்ளார்.
அதேவேளை மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்தில் தலையீடு செய்ய மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதல் தடவையாக உச்ச நீதிமன்றில் உண்மைத் தகவல்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment