Home இலங்கை ராஜபக்சக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் – மஹிந்த அமரவீர: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

ராஜபக்சக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் – மஹிந்த அமரவீர: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin

மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ராஜபக்ஸக்கள் குற்றம் இழைத்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அவர்கள் நாட்டுக்காக ஆற்றிய சேவையை கருத்திற் கொண்டு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக அரசியல் ரீதியாக சில சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போலியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக முகநூலில் அவதூறு செய்வது குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் அது குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More