Home விளையாட்டு இந்தியாவுடனான இருபதுக்கு 20 போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியாவுடனான இருபதுக்கு 20 போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20  போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்துள்ளது ஜமெய்க்காவின் சபீனா பார்க்கில் இந்த இருபதுக்கு 20  போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் இந்தியாவை துடுப்பெடுது;தாடுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் தினேஸ் கார்த்திக் 48 ஓட்டங்களையும், விராட் கொஹ்லி 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ஜெரோம் டெய்லர் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஓவர்களில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் புதுமுக வீரர் எவின் லுயிஸ் ஆட்டமிழக்காது 62 பந்துகளில் 6 பவுண்டரிகள், 12 சிக்ஸர்கள் அடங்களாக 125 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஓரு போட்டியைக் கொண்ட இருபதுக்கு 20  போட்டி என்பதனால் போட்டித் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More