Home இலங்கை வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு

வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சானி அபேகுணவர்தனவிற்கு கொலை மிரட்டல் விடுத்தார் என வாஸ் குணவர்தனவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி முதல் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றம் சுமத்தப்பட்டுள்ள வாஸ் குணவர்தன, பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More