குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இராணுவத்தின் தரத்தை உயர்த்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என புதிய இராணுவத் தளபதி லெப்டினன் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
எவர் வேண்டுமானாலும் ஒர் அதிகாரியாக செயற்பட முடியும் என்றாலும் கனவான்களாக மாறுவதே முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக்கபூர்வமான விமர்சனங்கள் சிறந்த ஆளுகைகளை தாம் எப்போதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார். இலக்குகளை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தம்மீது நம்பிக்கை கொண்டு இராணுவத் தளபதி பதவியை வழங்கியமைக்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment