குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் நாட்டை துண்டாட முயற்சிக்கின்றது என இந்துராகரே தம்மரட்ன தேரர் தெரிவித்துள்ளார். இன ரீதியாக ஐந்து வலயங்களாக நாட்டை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவாத அடிப்படையில் வலயங்கள் பிரிக்கப்பட்டு ஆட்சி நடத்துவது ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Add Comment