குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய மட்டுமே ஆதரவளிக்கப்படும் என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், மாநாயக்க தேரர்களும் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றே கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அமுலில் இருக்க வேண்டும் எனவும், தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் அமைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினரும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டு எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரி;வித்துள்ளார்.
Spread the love
Add Comment