இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாசலப்பிரதேசம், மணிப்பூரில் பலத்த மழை பெய்து வருகின்றதனால் அந்தந்த மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல லட்சம் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், பல லட்சம் ஏக்கர் மதிப்பிலான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் முயற்சியில் மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன எனவும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment