Home இலங்கை இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட வகையில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்ட அடிப்படையில் சித்திரவதை செய்யப்படுவதாக சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகா தெரிவித்துள்ளார்.புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 30 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாம்களில் சி;த்திரவதைகள், குடிவரவு மோசடிகள், சட்டவிரோத ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.இலங்கையில் வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இது வரையில் தண்டிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களை சித்திரவதை செய்வது ஓர் வருமானம் தரும் வர்த்தக முயற்சியாக மாறியுள்ளது என  அவா  சுட்டிக்காட்டியுள்ளார். 2016 அல்லது 2017ம் ஆண்டில் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More