Home இலங்கை ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் :

ஐநா விசேட பிரதிநிதி ராஜதந்திரமற்றவர் – இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்படுகின்றார் – நீதி அமைச்சர் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் சென்றிருந்த  பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி பென் எம்மர்சன் ராஜதந்திரமற்றவர் எனவும், தகுதியற்றவர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பிரதிநிதி ஓர் இராணுவ அதிகாரியைப் போன்று கட்டளையிடும் தோரணையில் செயற்பட்டதாகவும் அது விரும்பத்தக்க ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை எம்மர்சன் வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More