லண்டனில் இடம்பெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரரும் குரோஷியாவின் சிலிச்சும் போட்டியிட்டனர். போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய பெடரர் 6-3 6-1, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையை பெடரர் படைத்துள்ளார்.
Spread the love
Add Comment