Home இந்தியா ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றில் முடித்து வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றில் முடித்து வைக்கப்பட்டது.

by admin

சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றில் முடித்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும்  2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்வது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று கூறி நாடாளுமன்ற உறுப்பினர் குப்புசாமி     வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போதே மனுதார் உயிரிழந்ததனையடுத்து மரணத்தை காரணம்  நீதிமன்றம்  இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

எனினும்  இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என நாகப்பட்டினம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான  ஏ.கே.எஸ்.விஜயன்   உச்சநீதிமன்றில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ஒரு மனுதாரர் குப்புசாமி காலமாகி இருந்தாலும், இந்த விஷயத்தில் தான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் தாக்கல் செய்திருப்பதால் இந்த வழக்கைத் தொடர தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றில்  இந்த வழக்கு விசாரணைக்காக  வந்திருந்த நிலையில்    ஜெயலலிதா காலமாகி விட்டதால் தற்போது இந்த வழக்கு காலாவதியாகி விட்டது எனக்கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More