குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொங்கோவில் காவல்துறை மா அதிபரை அந்நாட்டு ஜனாதிபதி ஜோசப் பபீலா (Joseph Kabila )பணி நீக்கம் செய்துள்ளார். தலைநகர் கின்சாசாவின் காவல்துறைப் பொறுப்பதிகாரியும் பணி நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களை கருத்திற் கொண்டு இவ்வாறு பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவில் சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டமை, வன்முறைகள் வெடித்தல், சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் கின்சாசாவில் இடம்பெற்ற சிறையுடைப்புச் சம்பவத்தில் 4000 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment