Home இலங்கை குளோபல் தமிழ்ச் செய்தியால் கனகாம்பிகை பாடசாலையின் கூரைக்கு நிதியுதவி

குளோபல் தமிழ்ச் செய்தியால் கனகாம்பிகை பாடசாலையின் கூரைக்கு நிதியுதவி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்னும் சில மாதங்களில்  நிலவும் பருவமழைக்கு முன் நிம்மதியாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள் கோரியுள்ளனா் என நேற்று எமது இணையத்தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
 குறித்த  செய்தியை பார்த்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவரும் தற்போது புலம் பெயர்ந்து லண்டனில் வசித்து வருகின்றவருமான வா. சிவகுமரன் என்பவா்   கனகாம்பிகை பாடசாலை  வகுப்பறை கட்டிட கூரையின் வேய்வதற்கு ஜம்பதாயிரம் ரூபா  நிதியினை வழங்கியுள்ளாா்.
எமது குளோபல் தமிழ் செய்தியாளரை தொடர்பு கொண்டு லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள சிவகுமரனின்  மனைவியின் மூலம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு பாடசாலை அதிபா் ந. சிவனேசனிடம்   குறித்த நிதி கையளிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின்  நலன் கருதி உடனடியாகவே உதவி செய்த வா. சிவகுமரன் குடும்பத்தினர் பாடசாலை சமூகம் தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனா்.

மழைக்கு முன் எங்கள் அவலத்தை தீருங்கள் – கனகாம்பிகைகுளம் பாடசாலை மாணவா்கள் கோரிக்கை

Jul 20, 2017 @ 06:21

இன்னும் சில மாதங்களில்  நிலவும் பருவமழைக்கு முன் நிம்மதியாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தி தாருங்கள் என கிளிநொச்சி கனகாம்பிகை  பாடசாலை மாணவா்கள் கோரியுள்ளனா்.

கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் பாடசாலையில் போதிய வகுப்பறை கட்டிடம்  இன்மையால்  தற்காலிககொட்டகை ஒன்றில்   தரம் ஒன்பது முதல் பதினொன்று வரையான மாணவா்கள் தங்களின் கல்விச் செயற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றனா்.

ஆனால் குறித்த  கொட்டகை பெருமளவு சேதமுற்று காணப்படுகிறது. குறிப்பாக கூரை பெரிதும்  சேதமுற்ற நிலையில்  தற்போது நிலவுகின்ற கடும் வெயிலுக்குள் சமாளிக்க முடியாது மாணவா்கள் சூரியனின் நகர்வுக்கு ஏற்ப இருக்கைகளை நகா்த்தி நகர்த்தி  இருந்தே கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனா் என  ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனா்.

இதனால் மாணவா்களால் சீராக கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவும்  ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனா்.எனவே குறித்த கொட்டகையில் கல்வி கற்கும் மாணவா்கள் தங்களுக்கு நிரந்தர வகுப்பறை கட்டிடம் ஒன்றை அமைத்து தருமாறும் அதற்கு முன்னதாக பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன் இ்ந்த கொட்டகையின் கூரையினை வேய்ந்து  தங்களின் அவலத்தை தீர்க்குமாறும் கோரியுள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More