தேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று விரைவில் தம்முடன் இணையவுள்ளது எனவும் இன்னும் இரு பௌர்ணமிகள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் ஒரு குழு இணையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அணி அரசியல் அமைப்பு சபையில் இருந்துகொண்டும் மற்றைய அணி வெளியேறியும் புதிய அரசியல் அமைப்பை தடுப்பதே தமது திட்டம் எனவும் அவர் குறிப்பிடடுள்ளர்h.
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக் ஷவின் இல்லத்தில் இடம்பெற்ற எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் புதிய அரசியல் அமைப்பு குறித்தும் ஏனைய நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Spread the love
Add Comment